Thursday, June 3, 2021

Prayer to Lord Ranganatha to protect your child

Prayer  to Lord Ranganatha to protect your child

 

By

Pathasarathy  Krishnan Vanamali

 


(I had written such a  prayer  in English   and requested my friends to translate in to tamil. This great author has written in majestic , poetic tamil. (https://stotrarathna.blogspot.com/2019/06/prayer-to-lord-of-sri-rangam-to-take.html ) My humble pranams to him)



1. அரங்கத்தின் அரசே ! அடியேன் பணிந்தேன்

ஆபத்து உற்றபோது உனையன்றி யார்துணை

 

2. நீரிலே மூழ்கி நீந்திடும் என்மகனை

மீனாக உருக்கொண்டு மீட்டுத் தருவாய்

 

3. நான் சுமந்தபோது அவனோர் பாலகன்

பெரியவன் ஆனபோது ஆமையாய் சுமப்பீரே

 

4. வாழ்கை சக்கரத்தில் சந்திக்கிறோம் மனிதமிருகம்

பன்றியுருவில் நீர் விளங்கி பயம் போக்குவீரே

 

5. பேய்களை கற்பனையில் கண்டு கலங்குகிறான்

அச்சத்தை நரசிம்மா உன்உருவால் போக்கிவிடு

 

6. வளரும் குழந்தைக்கு வளர்ந்திடும் தலைக்கனம்

அடிஅளந்தான் உருவிலே அடக்கியே அருள்வாயே

 

7. தந்தை சொல்லுக்கு தடையேதும் இல்லாது

பிள்ளை நிறைவேற்ற பரசுராமா வரம்தா

 

8. தர்மத்தின் மேன்மை அறியாது தடுமாறும்

பிள்ளைகள் மனங்களை ராமனாய் மாற்றிக்கொடு

 

9. உழவன் கலப்பையின்றி மாந்தர்க்கு உணவேது

உழைப்பின் உயர்வை பலராமனே புகட்டிவிடு

 

1. விஞ்ஞானம் பலகற்று வாழ்வாங்கு வாழ்ந்தாலும்

மெய்ஞானம் பிறவிபயன் உணர்த்து கோவிந்தா

 

11 . அநியாயம் பலகண்டு அஞ்சாது எதிர்த்திட

கல்கியாய் பிறந்துவந்து கண்மணிக்கு காட்டிடு

 

 

12. பெற்றவன் நான்எனினும் உன்னத சன்மமாய்

மைந்தர்க்கு அமைந்திட அரங்கா அருள்புரிவாய் !!

No comments: